Viji's உலகம்

Viji's உலகம்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. - குறள் 1281

நினைத்தவுடன் களிப்பக்கவும் பார்த்தவுடன் மகிழ்ச்சி கொள்ளவும் செய்யும் திறன் கள்ளுக்குக் கூட இல்லை. ஆனால் இந்தக் காமத்திற்கு உண்டு.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். - குறள் 1120

மிகவும் மென்மையானது என்று சொல்லப்படும் அனிச்ச மலரும் அன்னத்தின் தூவியும் (தூவி - இறகு?), மாதர் பாதத்திற்கு முட்களையுடைய நெருஞ்சிப்பழம் போன்றதாகும்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. - குறள் 1114

இந்த அழகிய பெண்களைக் கண்டால் அழகிய குவளை மலரும் நாணித் தலை குனியுமாம், இப்பெண்ணின் கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. - குறள் 1100

இருவருடைய கண்களும் பார்த்துக்கொள்ளும் போது பரிமாறிக் கொள்ளப்படும் உணர்ச்சிகளை விட வாய்ச்சொற்கள் எவ்வித பயனும் செய்து விட முடியாது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். - குறள் 1084

இந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் கண்டவரின் உயிரினைத் தின்று விடும் போல் தோன்றுகிறதே.
posted by தேசாந்திரி at 9:53 AM

6 Comments:

  1. பெயரில்லா said...
    thirukural OK. But, andha kavithaia enga suttinga........?
    It's gud.
    ')) said...
    உங்க கமண்ட்டுக்கு நன்றி, அந்த கவிதை ஒரு வலைப் பக்கத்தில் சுட்டது
    பெயரில்லா said...
    ella kavithaium enga sutathunu knojam solu, naagalum padikurom
    ')) said...
    hello radhi,
    Sutta edam ellam memorila ellanga. appadiye netla time pass panna ulavittu, ethavathu nalla kavithai kannula patta namma blogkla copy paste pannidarathu. ok. thanks for your visit
    ')) said...
    அன்பிற்குரிய விஜி, இது என்னுடைய பக்கம் தான். என் பெயரையும் போட்டிருப்பதற்கு நன்றி.
    ')) said...
    உங்கள் வருகைக்கு நன்றி தேசாந்திரி

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche